சுத்தமா எனக்கு ஒத்து வராத சப்ஜக்ட். பேசாம சைலண்ட்டா இருந்துடலாம்ன்னு பாத்தா இதுக்கு முன்னாடியே பல பேருக்கு போட்டில கலந்துக்கறது பத்தி ஓவர் அட்வைஸ் பண்ணிட்டேன். அவங்கள்ளாம் திருப்பி அட்வைசினா தாங்க மாட்டேன்.ஜீவ்ஸ் வேற மானம், மரியாதைன்னு ஒரு லெக்சர் கொடுத்தார்.
ஓகே கடைசில ஒரே ஒரு படம் மட்டும். இதுவும் பொன்னு வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல. ஒப்பேத்தல்தான்
எனக்கென்னமோ இந்த மாதிரி ஆள் இல்லாத சின்னகோவில்கள்தான் கடவுள்ன கான்செப்ட்டுக்கு பக்கத்துல வர மாதிரி தெரியும். நாமளா போய் கும்பிட்டுட்டு நெத்தில நாமளே திருநீர் அள்ளி அப்பிகிட்டு அக்கடான்னு அரை மணி நேரம் உக்காந்துட்டு வந்தா ஒரு திருப்தி கிடைக்கும்.
கூட்டமான கூட்டம் நெரியும் இடத்துல எப்படி கடவுள்தண்மையை உணர்ராங்கன்னுதான் தெரியல.
சரி அதெல்லாம் அவங்கவங்க நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாத எனக்கெதுக்கு இந்த கவலை.
படத்த பாத்து நாலு திட்டு திட்டனும்னா திட்டிட்டு போங்க. படத்துல பல தப்பு இருக்கு :(
மெகா போட்டிக்கு, சின்னதா ஒண்ணே ஒண்ணு
Posted by நந்து f/o நிலா at 24 comments
Subscribe to:
Posts (Atom)