நெகிழ வைக்கும் முடிவெடுத்த பதிவர் இம்சை. அவர் நண்பன் என்பதில் பெருமைப்படுகிறேன்

தயவு செய்து முழுவதுமாக படிக்கவும் இது மொக்கை அல்ல

இது இம்சையிடமிருந்து எனக்கு வந்த மெயில். பொறுமையாக முழுவதுமாக படிக்கவும்

Dear Friends

Good Evening, Thank you all for your support and guidance for an important decision in my life.
I have now made up my mind to quit my professional career in IBM and start my own project for supporting students from economically challenged background and move into social services full time.

It is a very hard decision for which I have been asking advice to almost everyone for past 2 months and now my mentor and all friends have finally agreed for my decision after getting the permission from my wife in person.

My mentor told me that she will provide me a most challenging work in social field so that I will runaway back to my family in Pune in a Year. I have accepted it.

I thank my wife whole heartedly for supporting my decision bcos she is now going to support me and my family for rest of her life.

I will keep you all updated. As of now I would be involved in setting up few training schools for training students who do their degree (BA, BCOM, BSC & Diploma) in Regional language. These students would be trained and placed in diferent companies.

Initially this plan would be implemented in Karnataka and in 5 years planning to expand to Tamilnadu, Kerala, Andra and Maharastra. Later on all over India.

It is going to be a very big and most challenging project. I have not yet thought how to implement it but I am now ready for the challenge. I would be officially moving into this role from April.

Planning to say good bye to IBM next week. I am not there in the pictures but Pavan's mother/ my wife is there.

Thanks
Venky


இது நம் சக பதிவர் இம்சையிடம் இருந்து வந்த மெயில்.இம்சை (அ) வெங்கியை ஒரு மொக்கை பதிவராக, ஜாலியாக கும்மிகளில் கலந்து கொள்பவராகத்தான் தமிழ்மணத்தில் தெரியும்.

இன்னும் கொஞ்சம் நெருங்கிய பதிவர் வட்டாரங்களில் அவரின் சமூக சேவைகளின்பால் ஈடுபாடு கொண்டரென்பதும் சில சேவைகள் செய்துகொண்டிருக்கிறார் என்றும் தெரியும்

ஆனால் இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவை பாருங்கள்.IBM ல் ஒரு நல்ல பொறுப்பில் இருக்கும் போது அதை விட்டுவிட்டு முழுநேர சேவையில் ஈடுபடவேண்டுமானால் எந்த அளவுக்கு இளகிய மனமும் சமூக அக்கறையும் வேண்டும்

அது சொந்த ஊரோ சொந்த மாநிலமோ கூட கிடையாது.அந்த குழந்தைகளின் எதிர்காலத்துக்கு தன்னுடைய எதிர்காலத்தை தள்ளிவைத்துவிட்டு உழைக்கப்போகிறார்.

அதுவும் தன் குடும்பத்தைவிட்டு பிரிந்துவந்து தனியாக( அவர் தன் குட்டிப்பையனின் மேல் வைத்துள்ள பாசம் இங்கு அனைவருக்கும் தெரியும்)

அந்த மெயிலை படித்தாலே அவரை பற்றியும் அவரின் முடிவு பற்றியும் எல்லாமே புரிந்துவிடும்.சில விஷயங்களை விளக்க வார்த்தைகளை தேடி போட்டு ஜல்லியடிக்க வேண்டியதில்லை.

ஆனால் அதைப்படித்தவுடன் எனக்கு வந்த குற்ற உணர்வில் இருந்து மீள வெகு நேரம் ஆனது.என்னுடைய இளவயதில் இருந்து எத்தனை லட்சியங்கள் மனதில், ஒன்றொன்ராக பிழைப்பின் பொருட்டு என்று சொல்லி பின்னால் செய்யவேண்டும் என்று நினைத்து நினைத்து....

ம்ஹூம்... கடைசியில் ஒன்றைக்கூட செய்யவில்லை. எல்லா சமூக சம்பந்தமான லட்சியங்களும் செத்துப்போய்விட்டது. பணத்தை துரத்தும் ஒரு முழு வியாபாரியாகத்தான் மாறிவிட நேர்ந்தது.
அப்படியே செய்யும் ஏதாவது உதவிகளும் ஏதாவது ஒரு விதத்தில் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கிறது.

ஆனால் திரு. இம்சை? ஏதாவது ஒரு சதவீத சுயநலம் இருக்கிறதா அவர் முடிவில்?அவரை விட இந்த முடிவுக்கு ஆதரவளிக்கும் அவர் மனைவியை பாருங்கள். இதில் இம்சைக்கு தோள் கொடுத்து குடும்பத்தை தான் சுமக்க தயாராகிறார். யார் இதில் உயர்ந்தவர் என்று சொல்ல?

ஆனால் இம்சை நீங்கள் கடக்க வேண்டிய பாதை கண்டிப்பாக கரடுமுரடாகத்தான் இருக்கும்.அதையெல்லாம் எதிர்கொள்ளும் துணிவோடுதான் இந்த முடிவை எடுத்திருப்பீர்கள்

நான், என் மனைவி, என் பெண் என்ற குறுகிய வட்டத்தை தாண்டிவரும் மனநிலையை எப்போதோ இழந்துவிட்ட என்னால் ஒரு அணில் அளவுக்காவது உங்களுக்கு உதவமுடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது வெங்கி.

நான் உங்கள் நண்பன் என்பதில் பெருமைப்படுகிறேன் வெங்கி

30 comments:

said...

imsai@venky is really greate ! சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை. சக பதிவர் என்ற முறையில் பெருமையாகவும், பொறாமையாகவும் உள்ளது(உண்மை அது தானே) வாழ்த்துகள் இம்சை! வெற்றி நிச்சயம்!

said...

எனக்கு நண்பராக தெரியாவிட்டாலும்..
அவர் முடிவு பிரம்மிக்க வைக்கிறது.
வாழ்த்துக்கள் - இம்சை.

said...

வாழ்த்துக்கள் வெங்கி!!!

said...

Simply superb post and must ne read by everyone.Imsai@Venky is really inspiring and I wish him all success in his project.Keep inspiring Venky.!
Thanx Nandhu f/o nila for keeping us informed
anbudan Aruna

said...

இந்த மெயில் எனக்கும் அனுப்பியிருந்தார். அவர் ஐபிஎம்-ல் வேலையை விட்டது ஜீரணிக்க கடினமான ஒன்றே.

ஆண்டவன் அவருக்கு எல்லா வளங்களையும் வழங்கட்டும்.

அன்புடன்

சிவராமன்
மங்களூர்

said...

வாழ்த்துக்கள் வெங்கி!!

said...

//ம்ஹூம்... கடைசியில் ஒன்றைக்கூட செய்யவில்லை. எல்லா சமூக சம்பந்தமான லட்சியங்களும் செத்துப்போய்விட்டது. பணத்தை துரத்தும் ஒரு முழு வியாபாரியாகத்தான் மாறிவிட நேர்ந்தது.
அப்படியே செய்யும் ஏதாவது உதவிகளும் ஏதாவது ஒரு விதத்தில் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கிறது//

இதை படிச்சதும் வரிக்கு வரி உண்மைன்னு தோனுது. சின்ன வயசுல இருந்த கொள்கைகள் லட்சியங்கள் எல்லாம் காத்தோட விட்டதை நெனச்சா குற்ற உணர்வு மேலிடுது.

ஆனா சமூக சேவை செய்ய வேண்டும் என்ற பவன் அப்பா இம்சை @ வெங்கியின் முடிவு பாராட்டத்தக்கது. இவ்வளவு முக்கியமான முடிவை எடுக்கறதுக்கு நிறைய துணிச்சல் வேண்டும். எடுத்த காரியத்தில் வெங்கி வெற்றி பெற மனமாற வாழ்த்துகிறேன்.

said...

இம்சை சக வலைபதிவர் + கும்மி நண்பர் என்ற முறையில் மிகவும் பெருமை படுகிறேன். வாழ்த்துக்கள்

said...

நான் மொக்கை போட வந்த புதிதில் எனக்கு நண்பர்களான் சிலரின் வெங்கியும் ஒருவர். அவருடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் செய்யும் சமூக சேவைகள் மற்ரும் அதற்காக அவரின் உழப்பு அனைத்தயும் தெரிந்து கொண்டேன். அப்போதிருந்தே அவர் மீது எனக்கு பெரும் மரியாதயும் மதிப்பும் வந்தது. இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவு அசாதாரனமானது.

உங்களை வணங்குகிறேன் வெங்கி.

said...

பாராட்ட கூட கூசுது.

said...

சாதனைகள் தொடரட்டும்...இம்சைக்கு வாழ்த்துகள்..

said...

முகம் தெரியாத சில இளைஞர்களைப் பற்றி முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன் - எப்படி இவர்களால் முடிகிறது! என்ற தலைப்பில்.

இப்போதோ நம் பதிவர்களுள் ஒருவரே தன்னையும் ஒரு திரியாக மாற்றிக் கொள்வதைப் பார்க்கும் போது ... என்ன சொல்வதென்றே தெரியாமையால் அந்த இளைஞர்களைப் பற்றி எழுதியதில் ஓரிரு வரிகளை மீண்டும் இங்கு தருகிறேன்;

மனிதநேயத்தால் அவர்கள் என்னாலெல்லாம் நினைத்தும் பார்க்க இயலா உயரத்தில் இருக்கிறார்கள். தலை வணங்குகிறேன். எல்லா நலமும் பெற்று அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனமாற வாழ்த்துவதைத் தவிர நான் வேறென்ன செய்ய ?


வெங்கியின் துணைவியார் ... இப்படி கணவன்-மனைவி அமைவது யாருக்கு அமையும்.

நல்லா இருக்கட்டும்.

said...

சாதனைகள் தொடரட்டும்...இம்சைக்கு வாழ்த்துகள்..

said...

எப்போ அவர் படகை எரிச்சாரோ..கண்டிப்பா வெற்றி நிச்சயம்...இவ்வளவு நாள் இருந்தது போதும்..!
இனி வாழும் முயற்சிக்கு..வாழ்த்துக்கள் வெங்கி சார்..!
சொன்ன உங்களுக்கும்தான் நந்து சார்.

said...

சகோதரர் வெங்கியுடைய நோக்கம் நல்லதாகவே உள்ளது. ஆனால் அவரை நம்பி ஒரு குடும்பம் இருக்கும் போது இருக்கும் வேலையை விடுவது என்பது சரியாகத் தெரியவில்லையே? வேலை செய்து கொண்டே ஏன் இது போன்ற நல்ல செயல்களை செய்ய முடியாது. Finance Back round நல்லபடியாக இருந்தால் பரவாயில்லை. இது பற்றிய எனது நீண்ட கருத்து உள்ளது. முடிந்தால் பின்னர் பின்னூட்டம் இடுகிறேன்.

said...

அப்துல் கலாம் போல ஒரு வாழ்வியலில் இல்லறத்தை இணைத்துக் கொள்ளாதவராக இருந்தால் இந்த முடிவை ஏற்கலாம் ஆனால் இது சிதம்ரத்தில் ஓர் அப்பாசாமி என்ற கதையாவல்லவா உள்ளது ???

said...

நந்து, பதிவு போட்டு வாழ்தினதுக்கு நன்றி. நீங்க ரொம்ப பாராட்டுர அளவுக்கு எதுவும் இல்ல ஏன்னா நான் இந்த வேலைய சும்மா செய்யவில்ல சம்பளம் உண்டு, அது இப்ப வாக்கரதுல 3ல ஒரு பங்குதான் ஆனாலும் நம்ம நாட்டில 75% பேர் சம்பாதிக்கரதுவிட 5 மடங்கு அதிகம்.

மனதுக்கு பிடிக்காத வேலய 11 வருசம் செஞ்சாச்சி இப்ப நல்ல சான்ஸ் வந்திருக்கு அதான் மனதுக்கு பிடிச்சத செய்யலாம்னு.

கண்டிப்பா சமூக அக்கறை விட சில காரணங்கள் இருக்கு.
1. குற்ற உணர்ச்சி - படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து எல்லாரும் பண்னும் தவறுகள் நானும் செய்திருக்கிறேன் ஆனா என் அதிர்ஸ்டம் எப்படியோ படிப்பு முடித்து நல்ல வேலையில் இருக்குறேன் , ஆனா என்னுடன் பதித்த என்னை விட திறமை, அறிவு எல்லாம் அதிகம் இருந்த என் பல நண்பர்கள் பணம் இல்லாததால் மேற்படிப்பு படிக்க முடியாமல் இப்பவும் 4000 ருபாய் வேலயில இருக்காங்க அது ரொம்ப மனதை உறுத்துது.
2. இதுவும் ஒருவகையான போதை தான் ஏன்னா நாம் செய்வதை நிறையா பேர் பாராட்டுராங்க. அது மனதுக்கு பிடிச்சிருக்கே...
3. மனைவியோட சப்போர்ட் இருக்கு, அவங்க முழு மனதுடன் சம்மதம் குடுத்து இருக்காங்க.
4. பணம் ரொம்ப கஷ்டம் இல்ல, பெற்றோர் அவங்களுக்கு தேவையானது சேர்த்து வைத்து இருக்காங்க
5. படிப்பு முடிச்சி வேலைல முதல் இரண்டு வருடம் Guidance இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன் , அதனால இவ்ளோ நாள் part timeமா செய்துவந்தென் இப்ப முழு நேரம் செய்ய சிலர் பண உதவி பண்ணராங்க.

அனைவரின் உதவியும் இந்த causeக்கு தெவைபடுது. உங்களோட knowledge & time ஷேர் பண்ணா போதும், உங்க வீட்டில இருந்தே செய்யலாம். தெவையான நேரத்தில கண்டிப்பா அனைவரிடமும் உதவி கேட்பேன்.

ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டாம் , வழக்கம் போல நம்ம கும்மி , மொக்கைய தொடருவோம்...
Thanks & regards to Everyone

said...

சக வலைபதிவர் + கும்மி நண்பர் என்ற முறையில் மிகவும் பெருமை படுகிறேன். வாழ்த்துக்கள் வெங்கி :)

said...

வாழ்த்துக்கள் வெங்கி,

//அனைவரின் உதவியும் இந்த causeக்கு தெவைபடுது. உங்களோட knowledge & time ஷேர் பண்ணா போதும், உங்க வீட்டில இருந்தே செய்யலாம். தெவையான நேரத்தில கண்டிப்பா அனைவரிடமும் உதவி கேட்பேன்.//
கண்டிப்பாக கேளுங்க என்னால் முடிந்த அளவுக்கு செய்கிறேன். மறந்துடாதிங்க. :))


//தமிழ்பித்தன் said...
அப்துல் கலாம் போல ஒரு வாழ்வியலில் இல்லறத்தை இணைத்துக் கொள்ளாதவராக இருந்தால் இந்த முடிவை ஏற்கலாம் ஆனால் இது சிதம்ரத்தில் ஓர் அப்பாசாமி என்ற கதையாவல்லவா உள்ளது ???
//
தமிழ்பித்தரே உங்களுக்கு நெருக்கமாக வெங்கியை தெரியுமா? சும்மா வாய்க்கு வந்ததை உளரி கொட்ட வேண்டாம்.. பணத்துக்காக பிடிக்காத ஒன்றை செய்யும் இந்த காலத்தில் அவரது இந்த முடிவுக்கு பாராட்டலாம்.

said...

வாழ்த்துக்கள்.

Anonymous said...

nice post

said...

நந்து, வெங்கி எனக்கும் மயில் அனுப்பி இருந்தார். எனக்குப் புரியவில்லை. நல்ல வேலையை விட்டு விட்டு சமூக சேவையில் குதிக்கிறாரே என ஒருகணம் நினைத்தேன். பின் சிந்தித்தேன். நண்பர் வெங்கியைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. கும்மி - மொக்கைப் பதிவர் எனவும், சில சமூக சேவைகள் செய்பவர் என்றும் அறிவேன். ஒரு முடிவு எடுக்கும் முன் பலரையும் கலந்தாலோசித்து, முக்கியமாக துணைவியிடம் ஆலோசனை பெற்று, பின்பு தான் செய்திருக்கிறார்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு

வள்ளுவனின் வாக்கிற்கிணங்க செயல்கள் செய்கிறார்.

அவரையும் அவரது முடிவிற்குப் பின்னால் துணை இருக்கும் அவரது மனைவியையும் மனதாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

என்னால் முடிந்த உதவி ( கடமை) களைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கிறேன் நண்பரே !

said...

இம்சை நீங்க சொல்லி இருக்கும் காரணங்கள் இன்னும் உங்கள் மதிப்பை உயர்த்துகிறது.

//உங்களோட knowledge & time ஷேர் பண்ணா போதும்,//

டைம் வேணா ஷேர் பண்ண நான் ரெடி. வெட்டியாத்தான் நிறய நேரம் இருக்கேன். ஆனா knowledge??? அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறமாதிரி என்கிட்ட இல்லையே. :P

said...

வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

சுரேகா உங்களின் "எப்போ அவர் படகை எரிச்சாரோ..கண்டிப்பா வெற்றி நிச்சயம்" வரிகள் அருமை

said...

இம்சை (அ) வெங்கியை எனக்கு யார் என்றே தெரியாது. அவரது நல்ல முயற்சி தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

said...

இம்சை,

//டைம் வேணா ஷேர் பண்ண நான் ரெடி. வெட்டியாத்தான் நிறய நேரம் இருக்கேன். ஆனா knowledge??? அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறமாதிரி என்கிட்ட இல்லையே. :P//

நந்து சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்,நம்மக்கிட்டேவும் பெரிசா knowledge சமாச்சாரம்லாம் இல்லை, ஆனால் நேரம் உள்ளது, வெட்டியாக போகும் எனது நேரத்தை செலவிட தயார், அதுவும் இருந்த இடத்தில் இருந்தே செய்யலாம் என்று நீங்கள் சொல்லும் போது , அதை கூட செய்ய முடியாதா, உங்கள் அளவுக்கு எல்லாம் தியாகம் செய்யும் பக்குவம் எனக்கு இன்னும் வரலைங்க! வருமா என்பதே சந்தேகம் தான்!

said...

இம்சை (எ) வெங்கி,

இப்படி ஒரு முடிவு யாராலும் அவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியாது. உங்கள் முடிவுக்கு தலைவணங்குகிறேன். உங்கள் துணைவியார் அந்த முடிவுக்கு உறுதுணையாக இருக்கிறார் என்பது இன்னும் மகிழத்தக்கச் செய்தி!

வாழ்த்துக்கள். இந்தியாவில் சந்திப்போம்.

அன்பின்,
தஞ்சாவூரான்.

said...

//வவ்வால் said...
,நம்மக்கிட்டேவும் பெரிசா knowledge சமாச்சாரம்லாம் இல்லை, //

வவ்வால் கிடைச்ச கேப்ல இப்படி சொல்லிட்டீங்களே. ஓவர் அவையடக்கம் உங்களுக்கு. நீங்களே இப்படி சொன்னா என்னையெல்லாம் என்ன லிஸ்ட்ல வைப்பது?

said...

அட, சந்தோஷமா இருக்கு படிக்கவே.

பிடிச்ச வேலை செய்யர ஐடியா நல்லா இருக்கே.

Balancedஆ எல்லாத்தையும் பாத்துக்கங்க.

வாழ்த்துக்கள்!

said...

அருமை
இன்னும் நிறைய எதிர் பார்த்து
http://loosupaya.blogspot.com