அண்ணே ஒரு வெளம்பரம்......

ரொம்ப ஆசையா இருந்தேங்க இந்த மாச PIT சப்ஜெக்ட் மேல. ஞானம் கிடைக்கும் நிலைக்கு போய்வந்ததால புதுசா எதையும் ட்ரை பண்ண முடியல.

சரி இந்த மாசம் விட்டுட்டா போச்சுன்னு இருக்கப்போ. திடீர்ன்னு புது படம்தான் போடறதுன்ன நம்ம பாலிசிய உடைச்சு பழைய படத்துல ரெண்டு தேத்துனா என்னன்னு ஒரு ஐடியா.

சும்மா போட்டில பங்கெடுத்துகிட்டா கூட போதும். ரெண்டு மணி நேரம் உக்காந்து பிக்காசாலயே தேத்தியாச்சு,

ரெண்டு படமுமே ஜாலிக்குன்னாலும் நல்லா யோசிச்சீங்கன்னா ரெண்டுக்குள்ளயும் இருக்கும் சீரியஸ்னஸ் புரியும் . இதுக்குத்தான் ஞானம் கிடைக்கனுங்கறது.

ரெண்டாவது படத்த இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணி இருக்கலாம். இப்பவே ஒரு மணி நேரம் லேட்.

நாதாஸ் மெடிக்கல் சர்ட்டிஃபிகேட்லாம் கேப்பாரான்னு தெரியல.




========================================



படத்தை பெருசா பாக்க இங்க க்ளிக் பண்ணுங்க

சொந்த மரண தரிசனம் கிடைத்திருக்கிறதா? எனக்கு கிடைத்தது


சாவை நெருங்கிவிட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? கண்ணை மூடியதும் மரணம்தான் என நினைத்திருக்கிறீர்களா?. அதைவிட அது ஆனந்தமாகக்கூட இருக்கும் என தெரியுமா?

ஒரு வாரத்துக்கு முன்னாடி சரியான காய்ச்சல்ங்க எனக்கு. மூணு போர்வை போர்த்தி படுக்கும் அளவு குளிர்.மனைவியும் ஊரில் இல்லை. எனக்கு கால்ல முள்ளுகுத்திட்டா கூட பக்கத்துல மனைவி வேணும்( முள்ளு குத்துலைன்னாலும்தான்). அவசரமா அவள கிளம்பி வரச்சொல்லிட்டு எங்க பேமிலி டாக்டரிடம் போய் அவர பேசவே விடாம எனக்கு ஃபுட் பாய்சன் ஆயிடுச்சுன்னு சொல்லி. ஃபுட்பாய்சனுக்குண்டானா இருந்த இல்லாத சிம்டம்சைல்லாம் சொல்லி மருந்துவாங்கிட்டு வந்தாச்சு.

மூணுநாள் கோர்ஸ் மாத்திரை கம்ப்ளீட் ஆகியும் காய்ச்சல் விடவே இல்லை. உடம்பு கிழிஞ்ச நாறாயிடுச்சு. திரும்ப டாக்டரிடம் போய் ப்ளட்டெஸ்ட் பண்ணதுல( ப்ளட் டெஸ்ட் எடுத்த நர்ஸ நிலா கொலைவெறியோட பாத்தது தனிகதை) ப்ளேட்லெட் கவுண்ட்ஸ் அதளபாதாளத்துக்கு போனது தெரிஞ்சது. ப்ளேட்லெட்ஸைக் குறைக்கும் வைரல்ஃபீவர்.

உடனே ஒரு இஞ்செக்சன் ட்ரிப்போட போட சொல்லி எழுதி மூணாவது ஃப்ளோர்க்கு அனுப்பிட்டார். பொதுவாவே உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருக்கப்பவோ, பிசினஸ்ல லாஸோ, அல்லது டிஸட்வாண்டேஜா எதாச்சும் நடக்கும் போதெல்லாமோ எனக்கு எங்கண்ணனுக்கெல்லாம் நக்கல் நையாண்டி லொள்ளு திமிரு டபுளாயிடும். பிறவியே அப்படித்தான். அதே போலதான் சசி நிலாவோட ஏகப்பட்ட நக்கலோட ட்ரிப்போட போய் கையில் ஊசில்லாம் குத்தி ட்ரிப்பும் போட்டாச்சு.

கிட்ட்டதட்ட ஒரு லார்ஜ் அளவு மருந்து ஒண்ணை சிரிஞ்சில் எடுத்து எடுத்து ட்யூப் வழியா செலுத்திட்டு போயிட்டாங்க. அத போட்ட உடனே கிர்ருன்னு தலைல்லாம் சுத்த ஆரம்பிச்சிருச்சு. அந்த வழியா போன சிஸ்டர்கிட்ட "என்னங்க இது குவார்ட்டர் அடிச்ச மாதிரி இருக்கு"ன்னு கேட்டேன் சிரிச்சுகிட்டே போயிட்டாங்க,

ஆனா அப்படியே கான்சியஸ் போக ஆரம்பிச்சுது. ரொம்ப கஷ்ட்டப்பட்டு வார்த்தையை உள்ள இருந்து இழுத்து வந்துதான் ரெண்டு வார்த்தையே பேச முடிஞ்சது. வாய் வேற குழறுது. ஒரு சிஸ்டரை கூப்பிட்டு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு இந்த மருந்து இப்படித்தான் ரியாக்ட் பண்ணுமான்னு கேட்டேன். இத கேக்கறதுக்கே அவ்ளோ கஷ்டமாயிடுச்சு. அதுக்கு அந்த நர்ஸ்..

" எத்தனை பேர் ட்ரிப் ஏத்திகிட்டு கம்முன்னு படுத்திருக்காங்க. நீங்க மட்டும் ஏன் சார் இப்படி பண்றீங்க?"

உஸ்ஸ்ஸ் என்னால முடியல.

இன்னொருவிஷயம் அந்த இஞ்செக்சனால உடம்பும் மனசும் அவ்ளோ ஆனந்தமா இருக்கு. அப்படியே மிதப்பது போல இருக்கு.துளி கூட பயம் வரல. ஆனா மருந்து அலர்ஜி ஆயிடுசான்ன கவலையாலதான் இந்த கேள்வில்லாம்.

இதுக்கு மேல கான்சியஸ இழுத்து பிடிக்க முடியல. கண் மூட ஆரம்பிக்குது. நினைவுதப்புது. சரி மருந்து அலர்ஜியாயிடுச்சு. மேட்டர் முடியபோவுது. கடைசியா சசிகிட்ட சொல்லிடுவோம்னு இருக்கும் சக்தியெல்லாம் திரட்டி
"ச..சீ இ..ங்..க பா..ரு" ன்னு இதை மட்டும்தான் சொல்ல முடிஞ்சுது. அவ அதுக்கு

"என்ன மாமா? பாப்பா கழுத்தபுடிச்சு கிள்ளாத. எத்தன தடவ சொல்றது. அப்புறம் பாரு. ம்ம்ம் சொல்லுங்க மாமா"

உஸ்ஸ் அப்பா நீயுமா? கொஞ்ச நாளா இப்ப வாங்கி கொடுத்த ஸ்கூட்டி பெப்பில் அவளா எல்லா வேலையும் பறந்து பறந்து செய்யறதுல பூரிச்சுப்போயிருந்தேன். நாம இல்லன்னாலும் என் நம்ம பொண்ட்டாட்டி எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிடுவான்னு.

அடி என் செல்ல கேனபுள்ள உன் புருஷன் செத்துகிட்டு இருக்கான் உனக்கு அதுகூட தெரியாம இருக்கியே கண்ணு.ட்ரிப் இறங்கி முடிஞ்சு பின்னாடிதான் நான் செத்ததே உனக்கு தெரியுமாட்டம் இருக்கு. இப்படி இருக்க நீ இந்த உலகத்துல இந்த குட்டி பொண்ண வெச்சுகிட்டு எப்படிடி சமாளிப்ப. எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவும் எனக்கு சக்தி இல்ல. சரி நமக்கான எல்லா வழியும் அடைபட்டிருச்சுன்னு நினைக்கும் போதே கான்சியஸ் அப்படியே போயிடுச்சு.
ஆனாலும் கடைசியா மனைவி குழந்தையை பத்தி நினைத்ததும் கண்முன் அவர்கள் நின்ற உருவமும் மட்டும் ஓரத்தில் அப்படியே இருக்கு.

ஆனால் இது எதுவுமே துக்கமாகவோ கஷ்டமாகவோ பயமாகவோ துளிகூட தெரியவில்லை. ஆனந்தகடலுக்குள் அல்லவா இருக்கிறேன்.

அப்படியே நான் மிதப்பதையும் எங்கோ செல்வதையும் உணர்கிறேன். அப்படியே ஒரு வெளிச்சமான வெளிச்சம் ஆனால் கண்ணை கூசாத ரம்மியமான இடத்தை பார்க்கிறேன். மிகப்பரந்தவெளி. இரண்டு அல்லது மூண்று அடி உயரத்தில் கண்ணுக்கு குளுமையான தூய வெண்மையில் அசையாத ஒரே அளவில் ஏதோ ஒண்று கண்ணுக்கெட்டிய தூரம்வரை எண்ணிலடங்காமல் இருக்கிறது.

அதை பார்க்கிறேன். மனதில் அப்படி ஒரு சலனமே இல்லாத அமைதி. மெதுவாக அந்த ஒன்றொன்றும் இந்த உலகின் உயிர்கள் என்று புரிகிறது. மீண்டும் அமைதி. எல்லா உயிர்களும் ஒரே அளவு ஒரே உயரம். ஒவ்வொண்றுக்கும் பாகுபாடில்லாமல் எல்லாமே ஒரே அளவு தரப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் யாரோ உணர வைப்பதாக படுகிறது. ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை.

எல்லோருக்கும் ஒரே அளவு தரப்பட்டிருந்தால் யாருக்கு யார் கொடுப்பது? யாரை யார் காப்பாத்துவது. எல்லாரிடமும் எல்லாமே இருக்கிறது. இதில் கொடுக்க என்ன இருக்கிறது எடுக்க என்ன இருக்கிறது.

இது தோண்றிய அடுத்த கணம் ஓரத்தில் மறையாமல் இருந்த மனைவியும் நிலாவும் மனதில் இருந்து சுத்தமாக மறைந்துவிட்டனர். இப்போ மனதில் பேரமைதி பேரானந்தம்.இனி இந்த உலகத்தில் என்னுடைய கடமை ஒண்றுமே இல்லை.அடுத்தது என்ன மரணம்தானே ஆஹா அதை பார்க்கலாம் எப்படி வருகிறது என்று ஆர்வத்துடன் ஆனந்தத்துடன் உற்று கவனிக்கிறேன். எந்த புள்ளியிலிருந்து வருமென்று. ம்ஹூம் வரவே இல்லை :(. கண்ணை விழித்துபாக்க தோண்றுகிறது. சிரமப்பட்டு முயற்சி செய்ய விழிப்பு வந்தது. முன்புபோலவே மயக்கத்துடன்.

பின்பு சசியை கூப்பிட்டு 5 நிமிடத்துக்கு ஒருதடவை பார்த்து கான்சியஸ் போகாமல் பாத்துக்கோ எனும்போதுதான் பாவம் அவளுக்கு சீரியஸ்னெஸ் புரிந்தது.

ட்ரிப் முடியும்போது ஓரளவுக்கு தெளிவாகிவிட்டேன். ட்ரிப் எடுத்த பின்பு ஹெட்நர்ஸை கூப்பிட்டு(அப்போதும் பேச்சு சரியாக வரவில்லை) இந்த மருந்து இப்படி எஃபெக்ட் கொடுக்குமென்று முன்னாயே சொல்லலாமில்லையா? தண்ணி அடித்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் எனக்கே இப்படின்னா மற்றவர்கள் என்ன ஆவாங்க என்றதுக்கு. நான்கைந்து நர்ஸ்களுமாக "பயந்துட்டீங்களா" என்று கொல்லென்று சிரித்தார்கள்.

மருந்தின் உபயம் மனசுல அப்படி ஒரு அமைதி. இல்லைன்னா அருவாளை தேடி இருப்பேன்.

திரும்பி வீடு வரும்போது எல்லாமே புதுசாக தெரிகிறது. அந்த ஆட்டுகுட்டி எவ்வளவு அழகா துள்ளி குதிக்குது. அந்த மரத்தின் பச்சை என்ன அற்புதம்.


ஒரு பெத்தடின் ஊசியிலோ ஒரு இழுப்பு கஞ்சாவிலோ கூட இப்படி ஒரு அனுபவம் நேரலாமாயிருக்கலாம். இது கூட அட்டு மேட்டராக இருக்கலாம். ஆனால் சாவுவந்துவிட்டது என்று பயமில்லாமல் ஆனத்தத்தோடு அதை எதிர்கொண்டு எல்லோருக்கும் வரும் குடும்ப கவலைக்கும் விடை கண்டு கிட்டதட்ட ஞானம் கிடைக்கப்பெற்ற ரேஞ்சில் ஸ்ஸ்ஸ் அப்பா அற்புதமான அனுபவம்ங்க.

இப்படி வலியில்லாமல் ஆனந்தமாக சலனமில்லாத மனசுடன் அமைதியாக மரணம் வருமெனில் மரனத்தை நேசிக்கிறேன்,


என் மனைவிக்குத்தான் வீட்டுக்கு வந்து விஷயம் முழுசா தெரிஞ்சு... பாவம் புள்ள மூணு மணி நேரம் மூடவுட்

======================================================

அடுத்த நாளும் ட்ரிப் போடவேண்டி இருந்தது. டாக்டரிடம் அனுபவத்தை சொன்னேன். சொல்லிவிட்டு இதற்காகவெல்லாம் அந்த இஞ்செக்சனை மாத்திடாதீங்க. அதையே போடுங்க எண்றதும். உனக்கு இனி அது கிடையாது. ப்ரிஸ்கிரிப்ஷனையும் வாங்கிக்கொண்டு விட்டார். விட்டா அதை நீயே வாங்கி போட்டுக்குவ. உனக்கு நல்லாயிடுச்சு ஓடிப்போயிடுன்னுட்டார்,

ஆக்சுவலா அது அலர்ஜிதான் ஆயிருக்கு.யாருக்கும் அப்படி ஆனதில்லையாம். ஆனால் எனக்கு கம்மியான அலர்ஜி ஆகி இருக்கு.